Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தாம்பரம்; சென்னை பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு வந்த 10 பேர் கொண்ட கஞ்சா கும்பல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
கத்தி, வீச்சறுவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் என 7 பேரை அடித்து உதைத்ததுடன், 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
மறுபடியும் ஒரு மணி நேரம் கழித்து வந்த அதே கும்பல் மறுபடியும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோட்டினார்கள்.
விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் இருந்துவந்துள்ளது,
இந்த நிலையில் அதில் ஒரு கோஷ்டியை சேர்ந்த இளவரசன் என்ற வாலிபரை பெட்ரோல் பங்கில் தேடிவந்த பொது தேடிய நபர் கிடைக்காத ஆத்திரத்தில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தாக்கியள்ளனர்.
அப்போது 3 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்ப்பட்டது. ஊழியர்களையும் தாக்கிவிட்டு தப்பியோட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை செய்துவிட்டு திரும்பிய சிறிது நேரத்தில் அதே 10 பேர் கொண்ட கும்பல் வந்து ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் தாக்கிவிட்டு் தலைமறைவானார்கள்.
இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து பின் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
வெட்டுகாயம் பட்ட 3 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.